<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

பொருளாதாரம்

பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ அல்லது இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது. இத்தகைய காரணிகள் ஒரு பொருளாதாரம் செயல்படும் இடத்தில் சூழல், உள்ளடக்கம் மற்றும் பொருளாதார நிலைகள் மற்றும் அளவீடுகள் ஆகியவற்றைக் கொடுக்கின்றன.
இன்று பொருளாதாரம் அல்லது அதன் பகுதியை ஆராயும் பதிவுற்ற மற்றும் விவரிக்கும் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல வரலாற்றின் கிளைகளான (பொருளாதார வரலாறு) அல்லது புவியியல் (பொருளாதாரப் புவியியல்) ஆகியன அடங்கியுள்ளன. மனித நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்புள்ள நடைமுறைக் களங்களில், உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டுள்ளவற்றில் பொறியியல்லிருந்து மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகத்திலிருந்து செயல்முறை அறிவியல் மற்றும் நிதி வரை விரிந்துள்ளன. அனைத்து வகையான தொழில்கள், வேலைகள், பொருளாதாரக் காரணிகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாகும். மேலும் அவை சந்தைச் சமநிலையைத் தீர்மானிக்கின்றன. பொருளாதார நடவடிக்கையில் மூன்று முக்கியத் துறைகளுள்ளன, அவையாவன: விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறை ஆகும்.
ஆங்கிலச் சொற்களான "பொருளாதாரம்" மற்றும் "பொருளியல்" ஆகியவை கிரேக்க சொற்களான οἰκονόμος "குடும்பத்தை நிர்வகிப்பவர்" (οἴκος "வீடு, மற்றும் νέμω "விநியோகம் (குறிப்பாக நிர்வகிக்க)"), οἰκονομία "குடும்ப மேலாண்மை", மற்றும் οἰκονομικός "குடும்பத்தின் அல்லது இல்லத்தின்" ஆகியவற்றில் தடம் பொதிந்துள்ளது. "பொருளாதாரம்" எனும் சொல்லின் பதிவு செய்யப்பட்டப் பொருள் 1440 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டத்திற்கு சாத்தியமுடைய படைப்பில் காணப்பட்டது. அது "பொருளாதார விஷயங்களின் மேலாண்மை", எனும் பொருளில் இருந்தது. அது குறிப்பிட்டதொரு துறவியில்லத்தையாகும். பொருளாதாரம் பின்னர் அதிகளவில் "சேமிப்பு" மற்றும் "நிர்வாகம்" உள்ளிட்ட பொதுப்படையான பொருள்களில் பதிவுசெய்யப்பட்டன. தற்போது பெரும்பாலும் பயன்படும் "நாடு அல்லது ஒரு பகுதியின் பொருளாதார அமைப்பு", என்பது 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டு வரை மேம்படுத்தப்படாததாகக் காணப்படுகிறது.[1]

பொருளடக்கம்

  • 1 வரலாறு
    • 1.1 பண்டைய காலங்கள்
    • 1.2 இடைக் காலங்கள்
    • 1.3 முன் நவீன காலங்கள்
    • 1.4 தொழிற் புரட்சி
    • 1.5 பொதுவுடைமையும் அதன் முதலாளித்துவத்தின் மீதான பார்வையும்
    • 1.6 இரண்டாம் உலகப் போர்
    • 1.7 பின் நவீனத்துவப் பொருளாதாரம்
  • 2 பொருளாதாரத் துறைகள்
  • 3 பொருளாதார அளவீடுகள்
    • 3.1 மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • 4 ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம்
  • 5 மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் பெரிய பொருளாதாரங்கள்(அமெரிக்க டாலர் மில்லியன்களில்)
  • 6 மேற்கோள்கள்
  • 7 வெளி இணைப்புகள்

வரலாறு

பண்டைய காலங்கள்

யாரேனும் ஒருவர் பொருட்கள் அல்லது சேவைகளைக் செய்தும் விநியோகித்து வரும் வரை அங்கு சில வகையான பொருளாதாரம் இருக்கும்; பொருளாதாரங்கள் சமூகங்கள் வளர்கையில் பெரிதாகின்றன. மேலும் மிகச் சிக்கலாக மாறுகின்றன. சுமேரியர்கள் பேரளவிலான பொருளாதாரத்தைப் பொருள் பணத்தின் அடிப்படையில் உருவாக்கினர்; அதே போல பாபிலோனியர்களும் அவருடைய அருகாமை நகர அரசுகளும் பின்னர் நாம் நினைக்கின்ற வகையில் துவக்கக்கால பொருளாதார அமைப்பை, கடன் மீதான விதிகள்/சட்டங்கள் வரையறைகளில், சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முறைகளின் சட்ட விதிகள் மற்றும் தனியுடைமை வரையறைகளில் உருவாக்கினர்.[2] இன்று விலையமைப்பு என அறியப்படுவதின் துவக்கம் அது முறைமையாக்கப்பட்டபோது ஏற்பட்டதாகும்.[3]
பாபிலோனியன்கள் மற்றும் அவரது அருகாமை நகர அரசுகளும் பொருளாதார வடிவங்களை தற்போது பயன்படுத்தப்படும் குடி சமூக (சட்ட) கருத்துருவங்களுடன் ஒப்பிடக்கூடியவற்றை உருவாக்கினர்.[4] அவர்கள் வரலாற்றில் முதலாவதாக அறியப்பட்ட அமைப்பாக்கம் செய்யப்பட்ட சட்ட மற்றும் நிர்வாக அமைப்புக்களை நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் அரசு ஆவணங்கள் ஆகியவற்றோடு முழுமையாக உருவாக்கினர்.
முக்கோண குறுக்கு வெட்டுத் தோற்றமுடைய எழுத்துக்களை கண்டுபிடித்து பல நூற்றாண்டுகள் கழிந்தப் பிறகு எழுத்தின் பயன்பாடு கடன்/பணமளிப்பு சான்றுகள் மற்றும் கணக்கு புத்தகப் பட்டியல் ஆகியவற்றைக் கடந்து முதல் முறையாக சுமார் கி.பி.2600 ஆம் ஆண்டில் செய்திகள் மற்றும் கடிதப் போக்குவரத்து, வரலாறு மூத்தோர்/மரபுத் தகவல், கணிதம், வானவியல் ஆவணங்கள் மற்றும் இதர முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. தனியார் சொத்தைப் பிரிக்கும் வழி, கடன் மீது வட்டி வாதிக்கப்பட்டப் போதும்....., ஒரு நபருக்கு ஏற்படும் பொருள் அல்லது சொத்து பாதிப்புகளுக்கு சொத்து, பண இழப்பீடு விதிகள்... 'தவறான செயல்களுக்கு' அபராதம் மேலும் அமைப்பாக்கம் செய்யப்பட்ட சட்டத்திற்கு மாறாய் நடந்த பல்வேறு சிறு குற்றங்களுக்கு பண இழப்பீடு ஆகியன வரலாற்றில் முதல் முறையாகத் தரநிலைப்படுத்தப்பட்டன.[2]
பண்டைய பொருளாதாரம் முக்கியமாக சுயத்தேவை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஷெகல் பண்டைய எடை மற்றும் நாணய அளவாகக் குறிக்கப்படுகிறது. அவ்வரையறையின் முதல் பயன்பாடு கி.மு. 3000 ஆம் வருடத்தில் மெசொபோடாமியாவிலிருந்து வந்தது. மேலும் குறிப்பிட்ட அளவு பார்லியை இதர மெட்ரிக் மதிப்பீடுகளில் வெள்ளி, வெண்கலம், செம்பு முதலியவை போன்றதன் தொடர்பில் குறித்தது. பார்லி/ஷெகல் துவக்கத்தில் நாணய அலகு மற்றும் எடையலகு ஆகிய இரண்டுமாகும்... பிரிட்டிஷ் பவுண்ட் துவக்கத்தில் ஒரு பவுண்ட் வெள்ளியளவு மதிப்பலகு என்பது போன்றதாகும்.
கி.மு. 640 மூன்றில் ஒரு பங்கு கிரேக்க நாணயம் லிடியாவிலிருந்து, பெரிதாக காட்டப்பட்டுள்ளது.
மிக நவீன அறிஞரான ஹிரோடோடுஸ்சிற்கு இணங்க, லிடியன்ஸ் மக்களே தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் பயன்பாட்டை முதல் முறையாகப் அறிமுகப்படுத்தினர்.[5] அவர்களின் முதல் முத்திரையுடைய அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் கி.மு. 650-600 வாக்கில் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.[6] ஒரு கிரேக்க நாணயம் கிரேக்க (பலமுறை மீண்டும் வருவது) கிரேக்க மதிப்புக்களில் தயாரிக்கப்பட்டது. நாணயத்திற்கு எண் மதிப்புத் தர, பின்னங்கள் உருவாக்கப்பட்டன அவை: திரைட் (மூன்று), ஹெக்டெ (ஆறு) மற்றும் அதற்கு கீழான மதிப்புக்களில் ஆனவையாகும்.
பெரும்பாலான மக்களுக்கு பொருட்களின் பரிமாற்றம் சமூகத் தொடர்புகளால் நிகழ்ந்தது. சந்தைப் பகுதிகளிலும் வணிகர்கள் பண்ட மாற்று வணிகம் செய்தனர். பண்டைய கிரேக்கத்தில், தற்போதைய ஆங்கில சொல்லான 'பொருளாதாரம்' உருவானது, பல மக்கள் சுதந்திரநபர்களால் பிணை அடிமைகளாகப்பட்டு இருந்தனர். பொருளாதார விவாதங்கள் பற்றாக்குறையால் முன் செலுத்தப்படுகின்றன. அரிஸ்டாட்டிலே (கி.பி.384-322) முதல் முறையாக பொருட்களின் பயன் மதிப்பு மற்றும் பரிமாற்ற மதிப்பு ஆகியவற்றிற்கிடையிலான வேறுபாட்டை வகைப்படுத்தினார். (அரசியல், புத்தகம் I.) அவர் விவரித்த பரிமாற்ற விகிதாச்சாரம் பொருட்களின் மதிப்பை மட்டும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் வரலாற்றில் பெரும்பாலான நேரங்களில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் தொடர்புகளையும் கூட வெளிப்படுத்துகிறது. ஆகவே பொருளாதாரம் நிலைத்த மாற்று விகிதங்களை உருவாக்கும் நிறுவனங்களான ஆட்சி, அரசு, மதம், பண்பாடு, மற்றும் மரபு ஆகியவற்றிற்கு எதிராக நின்றது.[சான்று தேவை]

இடைக் காலங்கள்

இடைக் காலங்களில், நாம் இப்போது பொருளாதாரம் என அழைப்படும் சுயத் தேவைகளிலிருந்து மிகவும் விலகி இருக்கவில்லை. பெரும்பாலான பரிமாற்றங்கள் சமூக குழுக்களுக்குள்ளேயே நிகழ்ந்தன. இதன் மீதே, பெரிய வெற்றியாளர்கள் செயல் மூலதனத்தை (வென்சூரா , இத்தாலி; இடர் ) தங்களின் பிரதேச கைப்பற்றல்களுக்கு நிதியுதவியளிக்க திரட்டினர். மூலதனமானது அவர்கள் புதிய உலகிலிருந்து கொண்டு வரும் பொருட்களின் வாயிலாக திரும்ப அளிக்கப்படும். ஜாகோப் ஃபூகர் (1459-1525) மற்றும் ஜியோவானி டி பிக்கி டெ' மெடிசி (1360-1428) போன்றோர் முதல் வங்கியை நிறுவினர்.[சான்று தேவை] மார்கோ போலோ (1254-1324), கிறிஸ்டபர் கொலம்பஸ் (1451-1506) மற்றும் வாஸ்கோ டா காமா (1469-1524) ஆகியோரின் கண்டுபிடிப்புகள் முதல் உலக பொருளாதாரத்திற்கு வழியேற்படுத்தியது. முதல் தொழில்கள் வணிக நிறுவனங்களாகும். 1513 ஆம் ஆண்டில் முதல் பங்குச் சந்தை ஆண்டெவெர்ப்பில் நிறுவப்பட்டது. பொருளாதாரம் முதன்மையாக அக்காலத்தில் வணிகம் என பொருள் கொள்ளப்பட்டது.

முன் நவீன காலங்கள்

ஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்டவை ஐரோப்பிய அரசுகளின் கிளைகளாக ஆயின, அவை காலனிகள் என அழைக்கப்பட்டன. எழுகின்ற தேச-அரசுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன் மற்றும் நெதர்லேண்ட்ஸ் ஆகியன அவர்களின் தேசிய பொருளாதாரத்தை காக்க வணிகத்தை சுங்க வரிகள் மற்றும் வரிகள் மூலம் கட்டுப்படுத்த முயன்றனர். மெர்கண்டலிசம் (மெர்கேடார் , லத்தீன்: வணிகர்) தனியாரின் செல்வம் மற்றும் பொது நலன்கள் இடையே நடுவராக செயல்படுவதற்கான முதல் அணுகுமுறையாகும். ஐரோப்பாவை மதச்சார்பற்றதாக ஆக்கிய முயற்சி அரசுகளை நகரங்களின் உருவாக்கத்திற்கு சர்ச்சுகளின் ஏராளமான சொத்துக்களைப்பயன்படுத்த அனுமதித்தது. பிரபுக்களின் செல்வாக்கு குறைந்தது. முதலாவது பொருளாதாரத்திற்கான அரசுச் செயலர்கள் தமது பணிகளைத் துவங்கினர். அம்ஸ்ஷெல் மேயர் ரோத்ஸ்சைல்ட் (1773-1855) போன்ற வங்கி அதிபர்கள் போர்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற தேசிய செயல்திட்டங்களுக்கு நிதியளிக்கத் துவங்கினர். பொருளாதாரம் அது முதல் தேசியப் பொருளாதாரம் என நாட்டின் குடிமக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கான தலைப்பாகியது.

தொழிற் புரட்சி

பொருளாதாரவாதி எனும் சொல்லின் உண்மையான பொருளுக்கானவர் ஸ்காட்லாந்து நாட்டின் ஆடம் ஸ்மித் (1723-1790) ஆவார். தேசியப் பொருளாதாரத்தின் கூறுகளை அவர் விவரித்தார்: உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இயல்பான விலையில் போட்டியைப் பயன்படுத்தி - அளிப்பு மற்றும் தேவை - மற்றும் வேலை பகுப்பு முறை இவற்றால் அளிக்கப்படுகின்றன. சுதந்திர வர்த்தகத்தின் அடிப்படை நோக்கம் மனிதர்களின் சுய நலன்களே என அவர் வாதிட்டார். சுய நலன் கருத்தியல் பொருளாதாரத்தின் மானுடவியல் அடிப்படையாக ஆகியது. தாமஸ் மால்தஸ் (1766–1834) அளிப்பு மற்றும் தேவை சிந்தனையை மிகை மக்கள் தொகை பிரச்சினைக்குக் கடத்தினார். அமெரிக்க ஐக்கிய நாடுகள் அனைத்து ஐரோப்பிய நாடுகளின் குடியேறிகளின் இடமாக சுதந்திரமான[[பொருளாதார வளர்ச்சிக்கு ஆட்படுவதற்கு|பொருளாதார வளர்ச்சிக்கு ஆட்படுவதற்கு]] தேடுதலாக அமைந்தது. ஐரோப்பாவில் கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் மெர்கண்டலிச அமைப்பை மாற்றியமைக்கத் துவங்கி (இன்று: பாதுகாத்தலியம்) பொருளாதார வளர்ச்சிக்கு வழிவிட்டது. இன்று அந்தக் காலம் தொழிற் புரட்சி என அழைக்கப்படுகிறது; ஏனெனில் உற்பத்தியமைப்பும் வேலை பகுப்பு முறையும் பொருட்களின் பேரளவு உற்பத்தியை சாத்தியமாக்கின.

பொதுவுடைமையும் அதன் முதலாளித்துவத்தின் மீதான பார்வையும்

இங்கிலாந்தில் துவங்கி, ஒரே சமயத்தில் தொடர்புடைய இயந்திரமயமாக்கலின் வழிமுறையும் பொதுமக்களின் ஆற்றலை அடைத்துவைத்ததும் மூலதனத்தைக் கட்டுபடுத்துபவர்களின் செல்வத்தின் வளர்ச்சிக்கு வழிவிட்டது. அத்தோடு, பேரளவு வறுமை, பட்டினி, நகரமயமாக்கல் மற்றும் திவாலாகுதல் ஆகியவற்றை மக்கள் தொகைக்கு ஏற்படுத்தியது. இது கார்ல் மார்க்ஸ் (1818-1883) மற்றும் ஜெர்மானிய தொழிலதிபர் மற்றும் தத்துவவாதி பிரெடரிக் ஏங்கெல்ஸ் (1820-1895) போன்றவர்களை பொருளாதாரத்தை "முதலாளித்துவ அமைப்பு" என விவரிக்க ஏதுவாக்கியது.
முதலாளித்துவம் வேலைப் பிரிவினையை தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான குணாம்சமாகக் கொண்டது, அதில் உற்பத்தி வழிமுறைகள் நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஒட்டுண்ணி முதலாளித்துவ வர்க்கத்தால் சொந்தமாக்கப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர் முதலாளித்துவத்தின் கீழ், தொழிலாளர் வர்க்கம் உபரி மதிப்பை உற்பத்திச் செய்கிறது; அதில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தொழிலாளர்களுக்கு கூலி வடிவில் அவர்களின் குறைந்தப் பட்ச வாழ்க்கைக்கு திரும்ப அளிக்கப்படுவதாக நம்பினர். மீதமுள்ள உபரி மதிப்பு இலாபமாக வைக்கப்படுகிறது. மேலும் முதலாளியால் பொருட் சுழற்சி நடவடிக்கையில் மறு முதலீடு செய்யப்படுகிறது. சந்தையின் போட்டி சக்திகள் மூலதனத்தை "கூடுதல் மூலதன சேர்க்கையின் நலனுக்கு" தொடர்ச்சியாகச் சேகரிக்க உந்துகின்றன. விளைவாக ஏகபோகம், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் முதலாளித்துவத்தை, நிலப்பிரத்துவம் மற்றும் வேட்டையாடும் சமூகங்கள் என்பவற்றுடன் அதன் சொந்த உள் முரண்பாடுகளை பினைத்துக் கொண்டதொரு வரலாற்று ரீதியிலான- குறிப்பிட்ட உற்பத்தி முறையாகப் பார்த்தனர். முதலாளித்தும் அதில் ஈடுபட்டுள்ள நேரடி உற்பத்தியாளர்கள் அவற்றின் மீதான வேலைச் சூழல் அல்லது உற்பத்தி வழிமுறைக் கட்டுப்பாடுகளைக் கொள்ளாதவாறு ஓர் உற்பத்தி வழிமுறையாகும். அதுவே அவ்வாறு முதன் முறையாக அமைந்த உற்பத்தி வழிமுறையாகும்.
தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலின் வீழ்ச்சி தொழிலாளர்களை ஒன்றாக இணைந்து வர்க்கப் போராட்டமாக எதிர்த்துப் போராட வைக்கும், விளைவாக முதலாளித்துவ அரசை உழைப்பாளர்கள் வர்க்கப் புரட்சியில் தூக்கியெறிந்து, ஜனநாயக ரீதியிலான திட்டமிட்ட பொருளாதாரத்தை நிறுவி, அதில் நேரடி உற்பத்தியாளர்களாக தாங்களே - உழைப்பாளிகளே - மனிதத் தேவைகளை தீர்க்க, இலாபத்தைச் சேர்க்க அல்லாமல் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவர். ஆகையால் பொதுவுடைமைப் பிரகடனத்தில், மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் முதலாளித்தும் நகர்மயமாக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தை இருத்தலுக்கு கொண்டுவருகிறது. அவர்களே முதலாளித்துவத்தின் 'சவக்குழியை தோண்டுபவர்களாக ஆகின்றனர். அதற்கு உறுதுனையாக பொருளியல் சூழல்களும், பெரும் செல்வக் குவிப்பும் வர்க்க பேதமற்ற சோஷலிச சமுதாயத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைகின்றன.
முதலாவது மையப்படுத்தப்பட்ட திட்டமிட்டப் பொருளாதாரம் 1917 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், போல்ஷெவிக் கட்சியினால் நிறுவப்பட்டது, அதில் உற்பத்தி சோவியத் என அழைக்கப்பட்ட தொழிலாளர் குழுக்களைச் சுற்றி அமைக்கப்பட்டது. அதே போன்ற ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரும்ப அழைக்கப்படக்கூடிய தொழிலாளர் பிரதிநிதிகளின் குழு பின்னர் வந்த புரட்சிகளிலும், புரட்சிகர சூழல்களிலும், 20 ஆம் நூற்றாண்டு முழுதும், 1936 ஸ்பானிஷ் புரட்சி, 1974 போர்ச்சுகலின் கார்னேஷன் புரட்சி, 1979 இரானியப் புரட்சி மற்றும் போலந்தின் 1980 சாலிடாரிட்டி எழுச்சி உள்ளிட்டவைகளில் இருந்தது.

இரண்டாம் உலகப் போர்

இரு உலகப் போர்கள் மற்றும் பேரழிவை உண்டாக்கிய பொருளாதார மந்தநிலை பெருங் குழப்பங்களுக்குப் பிறகு, கொள்கை வகுப்பாளர்கள் பொருளாதாரத்தின் போக்கினை கட்டுப்படுத்த புதிய வழிகளைத் தேடினர். இது பிரெடெரிக் அகஸ்ட் வான் ஹயேக் (1899-1992) மற்றும் மில்டன் ஃபிரீட்மேன் (1912-2006) ஆகியோரால் தேடப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தது, அவர்கள் உலக சுதந்திர வர்த்தகத்திற்கு பரிந்துரைத்தனர் மேலும் புதிய தாராளவாதம் என அழைக்கப்படுதின் தந்தையர்கள் எனக் கருதப்பட்டனர். இருப்பினும், ஜான் மேனார்ட் கீன்ஸ் (1883-1946) என்பவர், அரசினால் வலுவான கட்டுப்பாடுகளைச் சந்தையில் கொண்டுவர வாதிட்டார். அதுவே மேலோங்கியிருந்தப் பார்வையாகும். அக் கருத்தியலானது பொருளாதாரப் பிரச்சினைகளை நீக்க, பொருளாதார வளர்ச்சியை அரசின் மொத்தத் தேவையை திறமையாகக் கையாண்டு தூண்டலாம் என்பதேயாகும். அது 'கீனீசயனியம்' என அவரைக் கௌரவப்படுத்த அழைக்கப்படுகிறது. 1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அமெரிக்க ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி விர்ச்ஷாஃப்ஸ்வுண்டர் எனும் (ஜெர்மனி: பொருளாதார அதிசயம் )- புதிய வடிவிலான பொருளாதாரத்தைக் கொண்டு வந்தது, அது: பேரளவு நுகர்வு பொருளாதாரம் என்பதாகும். 1958 ஆம் ஆண்டில் ஜான் கென்னத் கால்பிரியத் (1908-2006) முதலாவதாக செல்வ வளமிக்க சமூகத்தைப் பற்றி பேசுகிறார். பெரும்பாலான நாடுகளில் பொருளாதார அமைப்பானது ஒரு சமூகப் பொருளாதாரச் சந்தையென அழைக்கப்படுகிறது.

பின் நவீனத்துவப் பொருளாதாரம்

பொருளாதார நிபுணர் ராபர்ட் ரீச் வரையறுக்கிறார், பொருளாதாரம் "முற்றிலும் பொற்காலமாக இல்லாதது" (இரண்டாம் உலகப் போரிலிருந்து 1970 களின் மத்தி வரை)தற்போதைய உலகப் பொருளாதாரத்திற்கு அல்லது பேரியல் முதலாளித்துவத் திற்கு வழிவிட்டது.[7] இந்தப் பொருளாதார புரட்சி மேனாட்டு பண்பாடுகளின் அடிப்படை மாற்றங்களுக்கும், மேனாட்டு ஜனநாயக அரசியலிற்கு உள்ளடங்கிய ஆளும் வர்க்கத்தினர்/செல்வராட்சி வளர்ச்சிப் போக்குகளுக்கு இணையாக ஏற்பட்டது.
அத்தகைய விஷயங்களை உலக வங்கி, உலக வர்த்தக மையம் மற்றும் உலக பொருளாதார அமைப்பிற்குள்ளான உலகளவிலான பங்கேற்பாளர்களின் அரசியல் என்பதாக விவாதிப்பதும், அதே போல உலக வாழ்க்கைச்சூழல் மற்றும் நிலைத்த வளர்ச்சி போன்ற அனைத்தும் பொருளாதாரம் என்பதின் விளக்கத்தை செல்வாக்கிற்குட்படுத்தியது.
ஜோசப் ஈ. ஸ்டிக்லிட்ஸ் பொருளாதாரத்தை உலகப் பொதுச் சரக்காக விவரித்தார். பீட்டர் பார்ன்ஸ் மற்றும் அலெக்ஸாண்டர் டில் போன்ற பொருளாதார நிபுணர்கள் பொதுப்படையானவற்றை மீண்டும் சீர்த்திருத்துகின்றனர் மற்றும் இலவச மென்பொருள் போன்ற புதிய விஷயங்களை தழுவுகின்றவாறான விளக்கங்களையும் கொடுக்கின்றனர். எர்னெஸ்ட் ஃபெகர் மற்றும் கிளாஸ் எம். ஷூமிட் போன்ற கேம் கருத்தியல்வாதிகள் எங்கும் நிறைந்திருக்கிற பொருளாதார தன்னல எண்ணத்துடன் முரண்படுகின்றனர். அருந்திற பொருளாதாரத்தின் கீழ் விரிவான கீழ்மட்ட இயக்கங்கள் எழுந்துள்ளன; கூடவே நோபல் பரிசுப் பெற்ற முகம்மது யூனூஸ் ஆகியோரின் கடன் திட்டங்களும் வளர்ந்துள்ளன. 2006 ஆம் ஆண்டில் உலக வங்கி அதன் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் அறிக்கையினைச் சமூக மற்றும் மனித மூலதனத்தைத் தடமறிய வெளியிடத் துவங்கியது.

பொருளாதாரத் துறைகள்

பொருளாதாரம் பின் வந்த காலங்களில் ஏற்பட்ட பல துறைகளை (தொழில்கள் எனவும் அழைக்கப்படுபவை) உள்ளடக்கியது.
  • பழங்கால பொருளாதாரம் முக்கியமாக சுயத்தேவை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
  • தொழிற் புரட்சி சுயத்தேவை விவசாயத்தின் பங்கினை குறைத்தது, அதை அதிக விரிவான மற்றும் ஒற்றைப் பயிர் விவசாயமாக கடந்த மூன்று நூற்றாண்டுகளாக மாற்றியமைத்துள்ளது. பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் சுரங்கத்தொழில், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் தொழில்களில் நடந்தேறியது.
  • நவீன நுகர்வுச் சமூகப் பொருளாதாரங்களில் சேவைகள், நிதி மற்றும் தொழில் நுட்பம் ஆகியன பங்கொன்றை ஆற்றுகின்றன. (அறிவுசார் பொருளாதாரம்).
நவீனப் பொருளாதாரங்களில் நான்கு முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் உள்ளன:[சான்று தேவை]
  • 'பொருளாதாரத்தில் விவசாயத் துறை: இரும்பு, சோளம், கரி மற்றும் மரம் போன்ற மூலப் பொருட்களைத் தோண்டியெடுத்தல் மற்றும் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியது. (விவசாயத்துறையில் கரி சுரங்கத் தொழிலாளியும் மீன் பிடிப்பவரும் தொழிலாளர்களாக இருக்கலாம்.)
  • பொருளாதாரத்தில் தொழில்துறை: மூலப் பொருட்கள் அல்லது இடைப் பொருட்களை இறுதிப் பொருட்களாக மாற்றச் செய்வதை உள்ளடக்கியுள்ளது. எ.கா. எஃகை கார்களாக உற்பத்தி செய்வது அல்லது நெசவுக்குகந்ததை துணியாக மாற்றுவது. (தொழில் துறையில் கட்டுமானம் செய்பவரும் உடை உற்பத்தியாளரும் பணியாளர்களாக இருக்க இயலும்.)
  • பொருளாதாரத்தில் சேவைத் துறை: நுகர்வோருக்கும் வணிகர்களுக்கும் சேவையளிப்பதை உள்ளடக்கியுள்ளது, அவை குழந்தைப் பராமரிப்பு, திரைப்படம் மற்றும் வங்கி போன்றவையாகும். (சேவைத்துறையில் கடைக்காரரும் கணக்காயரும் தொழிலாளர்களாக இருக்க முடியும்.)
  • பொருளாதாரத்தில் ஆய்வுத் துறை: இயற்கை வளங்களிலிருந்து பொருட்களை உருவாக்கத் தேவையான ஆய்வு மற்றும் மேம்பாட்டை உள்ளடக்கியுள்ளது. (மரக்கட்டைகளை கையாளும் நிறுவனம் பகுதி எரிந்த மரங்களை பயன்படுத்த வழிமுறைகளைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்து அதனால் அதன் பாதிக்கப்படாத பகுதிகள் காகிதத்திற்காக காகிதக் கூழாக ஆக்கப்பட முடியும்.) இந்தத் துறையில் சில நேரங்களில் கல்வியும் உள்ளடக்கப்பட்டும் என்பதைக் குறித்துக் கொள்ளவும்.
பொருளாதார மேம்பாட்டின் பல்வேறு கட்டங்களைப் பற்றிய அதிகமான விவரங்கள் இக் கட்டுரையின் வரலாற்றுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. புவிவியல் ரீதியாக இந்த வழிமுறை ஒரே மாதிரியானத் தன்மையுடனிருப்பதில் தூர விலகியிருந்தாலும், இந்தத் துறைகளினிடையேயான சமநிலை உலகின் பல்வேறுப் பகுதிகளின் மத்தியில் விரிந்து வேறுபட்டுள்ளது.
இதர துறைகளில் உள்ளடங்கியவை
  • பொதுத் துறை அல்லது அரசுத் துறை
  • தனியார் துறை அல்லது தனியாரால் நடத்தப்படும் வணிகங்கள்
  • சமூகத் துறை அல்லது தன்னார்வத் துறை

பொருளாதார அளவீடுகள்

தேசத்தின் பொருளாதாரத்தின் நடவடிக்கையை அளவீடு செய்ய எண்ணற்ற வழிகளுள்ளன. இத்தகைய பொருளாதார நடவடிக்கையை அளவீடு செய்யும் வழிமுறைகளில் உள்ளிட்டவை:
  • நுகர்வோர் செலவு
  • வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம்
  • உள்நாட்டு மொத்த உற்பத்தி
  • மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி
  • மொத்த தேசிய உற்பத்தி
  • பங்குச் சந்தை
  • வட்டி விகிதங்கள்
  • தேசிய கடன்
  • விலையுயர்வு விகிதம்
  • வேலைவாய்ப்பின்மை
  • வர்த்தகச் சமநிலை

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி - ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதன் பொருளாதாரத்தின் அளவின் அளவீடாகும். ஒரு நாட்டின் மிக மரபுச் சார்ந்த பொருளாதார அலசல்கள் பொருளாதார அறிகுறிகளான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி போன்றவற்றை அதிகமாகச் சார்ந்துள்ளது. அதேபோல பலமுறை பயன்படுவதால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தி பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட பொருளாதார நடவடிக்கையை மட்டுமே உள்ளடக்கியது என்பதைக் குறிக்க வேண்டும்.

ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம்

ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் என்பது வரிகளுக்கு உட்படாததும் அரசினால் கண்காணிக்கப்படாததும் முறையான பொருளாதாரத்துடன் முரண்பட்டதுமானது ஆகும். ஆகையால், ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் அரசின் மொத்த தேசிய உற்பத்தியில் (GNP) யில் உள்ளடக்கப்படவில்லை. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரம் வளரும் நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும் அனைத்து பொருளாதார அமைப்புகளும் சில விகிதாச்சாரங்களில் ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.
ஒழுங்கு முறைச் சாராத பொருளாதார நடவடிக்கை ஒரு சுறுசுறுப்பான வழிமுறை. அதில் பல பொருளாதார மற்றும் சமூக கருத்தியல் அம்சங்களான பரிமாற்றம், கட்டுப்பாடு மற்றும் அமலாக்கம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. அதன் இயல்பில், அதை நோக்குவது, ஆராய்வது, விளக்குவது மற்றும் அளப்பது இன்றியமையாத தேவையாய் கடினமாயுள்ளது. ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தை ஆய்வுக்கான அலகாக எந்தவொரு தனித்த ஆதார மையங்களும் தயாராகவோ அல்லது அதிகாரப்பூர்வமாகவோ விளக்குவதில்லை.
இது போன்ற பொருளாதார வகையை "மேஜைக்கு அடியில்" மற்றும் "புத்தகத்தில் இடம்பெறாத" போன்ற வழக்கமான வரையறைகள் குறிக்கின்றன. கருப்புச் சந்தை எனும் வரையறை ஒழுங்கு முறைச் சாராத பொருளாதாரத்தின் குறிப்பிட்ட பொருளாதார உட் பகுதியைக் குறிக்கிறது. "ஒழுங்கு முறைச் சாராத" எனும் வரையறை பல முன்னாள் ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டது, மேலும் சமீப ஆய்வுகளில் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்டது. அது புதிய வரையறையைப் பயன்படுத்துகிறது.
நுண்ணியல் பொருளாதாரம் குறிப்பிட்ட பொருளாதார சமூகத்தில் தனி நபர் மீது கவனம் கொள்கிறது. மேலும் பேரியல் பொருளாதாரம் பொருளாதாரம் முழுமையையும் காண்கிறது. (நகரம், மாநகரம், பிரதேசம்).

                                                                                                                             நன்றி       wikipedia

      page : https://ta.wikipedia.org/s/1gb